search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவு இல்லம்"

    ஜெயலலிதா வீட்டை அரசு நினைவிடமாக மாற்றுவது தவறானது என்றும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். #Jayalalithahome #PoesGarden #TrafficRamasamy
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், கூறியிருப்பதாவது:-

    ‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரை குற்றவாளிகள் என்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை பெங்களூரு ஐகோர்ட்டு ரத்து செய்தாலும், அதை எதிர்த்து செய்யப்பட்ட அப்பீல் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவரை வழக்கில் இருந்து விடுவித்தாலும், வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவது தவறானது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’.



    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ‘இந்த வழக்கிற்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும்’ என்றார்.

    மனுதாரர் டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வக்கீல் அரவிந்தன் கூறியிருப்பதாவது:-

    ‘இந்த வழக்கு தொடர்ந்த பின்னர், சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது குறித்து போயஸ் கார்டன் பகுதி மக்களில் கருத்தை தமிழக அரசு கேட்டுள்ளது.

    இதற்காக நடந்த கூட்டத்தில், அப்பகுதி மக்கள், வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டை இதுபோல நினைவிடமாக மாற்றினால், அதனால் அப்பகுதியில் வசிப்பவருக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும் என்றும் பொதுமக்கள் வந்து சென்றால், எதிர்காலத்தில் போயஸ் கார்டன் குப்பை கூளங்களாக காட்சி அளிக்கும் என்று கூறியுள்ளனர். எனவே, இதுகுறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய உள்ளோம்’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 20ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் கூடுதல் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #Jayalalithahome #PoesGarden #TrafficRamasamy
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றம் செய்வது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. #Jayalalitha #JayalalithaHouse #PoesGarden #TNGovernment
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ‘வேதா நிலையம்’ இல்லத்தில் வசித்து வந்தார்.

    அவரது மறைவைத் தொடர்ந்து வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.

    இதை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றி பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார்.

    இதற்காக வேதா நிலையம் இல்லத்தை விலைக்கு வாங்கி கையகப்படுத்தவும், நினைவு இல்லமாக மாற்றுவதற்கும் தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியது. 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    இதே போல் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் வேதா நிலையத்தில் தனக்கு உரிமை இருப்பதாகவும் தன்னை கேட்காமல் வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தக்கூடாது என்றும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனால் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.

    மேலும் போயஸ் கார்டன் குடியிருப்பு வாசிகளும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தனியார் அமைப்பான சென்னை சமூக பணி கல்லூரியிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது.

    அந்த அமைப்பைச் சேர்ந்த ஈனாக் தலைமையிலான குழுவினர் தேனாம்பேட்டை சமூக நல கூடத்தில் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்கள். இதில் போயஸ் கார்டனைச் சுற்றிலும் 5 கி.மீ. பரப்பளவில் வசிக்கும் மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார் பேட்டை, கோபாலபுரத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி மொத்தம் 120 குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் 108 குடியிருப்பு வாசிகள் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.



    இது தொடர்பாக ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கார்த்திகா, அருணாசலம் உள்பட 108 பேர் தங்கள் கருத்துக்களை எழுத்து மூலமாக சமர்ப்பித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    மறைந்த ஜெயலலிதா எங்கள் பகுதியில் வசித்தது எங்களுக்கு பெருமையாக இருந்தது. அவர் வசித்த போது பெரிய தலைவர்கள் பலர் இங்கு வந்து சென்றனர். அப்போது இந்தப்பகுதியில் வசிப்பவர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். இதனால் எங்களுக்கு பிரச்சினை இல்லை.

    தற்போது நினைவு இல்லமாக மாற்றினால் அதற்கான போக்குவரத்து வசதிகளோ, வாகன நிறுத்தும் இடங்களோ அங்கு இல்லை. எல்லாமே சிறிய சந்துகளாகவும், சிறிய சாலைகளாகவும் உள்ளது. ஏராளமானவர்கள் வரும் போது வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் சிரமம் ஏற்படும். போக்குவரத்து நெரிசல் உருவாகும். திடீர் கடைகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.

    டெல்லி போன்ற இடங்களில் தலைவர்களின் நினைவு இல்லங்கள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பொது இடத்தில் அமைந்துள்ளன. அதுபோல் ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொது இடத்தில் அமைக்கலாம்.

    ஜெயலலிதா மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் மரியாதையும், பெருமையும் இருந்தாலும், போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் போது எங்களின் தனிப்பட்ட சுதந்திரமும், இந்தப் பகுதியின் அமைதியும் பாதிக்கப்படும்.

    இவ்வாறு தெரிவித்தனர்.

    அதே சமயம் இந்தப் பகுதி முன்னாள் கவுன்சிலர் சிவராஜ், பிரிதிவிராஜன் உள்ளிட்டோர் நினைவு இல்லமாக மாற்ற ஆதரவு தெரிவித்தனர். தலைவர்கள் வாழ்ந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்றுவதுதான் சரி.

    அதை இப்பகுதி மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.

    மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நாளை மறுநாள் (10-ந்தேதி) வேறொரு பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கருத்து கேட்பு கூட்டம் முடிந்ததும் இதுபற்றிய அறிக்கை மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். #Jayalalitha #JayalalithaHouse #PoesGarden #TNGovernment
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PoesGarden #HC
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.

    இந்த தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டது. தீர்ப்பின் அடிப்படையில், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில், சிறப்பு கோர்ட்டு விதித்த அபராத தொகையை, ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துகளை விற்று செலுத்த வேண்டும். அந்த வகையில் ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துகளில், போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லமும் ஒன்றாக உள்ளது.

    எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற முடியாது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், ஜெயலலிதாவின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் கர்நாடக அரசும் இறங்கவில்லை.

    ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபா, தீபக் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த அம்ருதா ஆகியோர் உரிமை கொண்டாடி வருகிறார்கள். ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளாரா?, இல்லையா? என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. தமிழக அரசும் இதுகுறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

    போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, 2 அறைகள் பூட்டி வைக்கப்பட்டன. அந்த அறைகளில் உள்ள ‘சீல்’ இன்னும் அகற்றப்படவில்லை. வருமான வரித்துறையும் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்காமல் உள்ளது.

    இப்படி பல்வேறு குழப்பங்கள், கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசு செலவில் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு எடுத்துள்ள முடிவு, விதிமுறைகளுக்கு முரணாக உள்ளது.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் நினைவு இல்லம் அமைப்பது ஏற்கக்கூடியது அல்ல. எனவே போயஸ் கார்டன் வீட்டை நினைவகமாக மாற்றும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர், இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #PoesGarden #HC

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். #SivanthiAditanar
    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி போயஸ் கார்டனில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ‘மாலைமலர்’ இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன், மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி. ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.

    மேலும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவித்தவர்கள் விவரம் வருமாறு:-



    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. எம்.பி. கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், த.மா.கா. மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், டாக்டர் கருணாநிதி, முன்னாள் எம்.எல்.சி. கடலூர் எல்.ஜெயச்சந்திரன், தண்டு பத்து ஜெயராமன், முல்லை ராமராஜன், காயாமொழி முருகன் ஆதித்தன்.



    சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனக ராஜ், மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனரும் இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் தலைவருமான ராஜ்குமார், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன்.

    அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கவிஞர் காசி முத்துமாணிக்கம், தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், சிம்லா முத்துச்சோழன்.

    காங்கிரஸ் மாநில பொருளாளர் நாசே.ராமசந்திரன், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர், டி.நகர் பகுதி தலைவர் நாச்சிகுளம் சரவணன்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் ஆதித்தன், தொழில் அதிபர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், நெல்லை மாவட்ட நற்பணி மன்ற செயலாளர் தோப்பு மணி, மாநில நிர்வாகக் குழு இயக்குனர் காயல் இளவரசு, மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர், தென்காசி ஆல்பா பீர்முகமது, திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் முல்லைராஜா, தொழில் அதிபர் முல்லை பிரைசன், வடசென்னை மாவட்ட நற்பணி மன்ற செயலாளர் ஜி.ராபர்ட், ஆர்.கே.நகர் நற்பணி மன்ற தலைவர் திராவிட சக்கரவர்த்தி.

    அசோக்நகர் கிளை செயலாளர் பொன். அருணாசல பாண்டியன், துணை செயலாளர் ஸ்ரீதரன் பாண்டியன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, அணியாபூர் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், மாவட்ட துணை செயலாளர் செல்வம், சிவந்தி ஆதித்தனார் விளையாட்டுக் குழு தலைவர் சாமிநாதன், செயலாளர் சீனிவாசன்.

    பெரம்பூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரெங்கசாமி, தமிழ்நாடு சத்ரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், கூடுதல் பொதுச்செயலாளர் மாரிதங்கம், மாநில துணை தலைவர் செல்வக்குமார், ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரன், செயலாளர் தங்கதுரை, மாடசாமி, தென்சென்னை மாவட்ட தலைவர் இம்மானுவேல், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கிறிஸ்டோபர், வடசென்னை இளைஞர் அணி தலைவர் கனகராஜன், தயானஷ், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம்.

    பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் காளிதாஸ், பொதுச் செயலாளர் தனம் என்ற ராமச்சந்திரன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை தலைவர் அ.முத்துக்குமார், எழில் நகர் நாடார் சங்க தலைவர் மாடசாமி, அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் தலைவர் தங்கபெரு மாள், ஆர்.கே.நகர் ஆதித்தனார் முரசு கணேசா.

    நந்தம்பாக்கம் நாடார் சங்க தலைவர் ஆர்.வி.கணேசன், ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் கணேசன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் லட்சுமணன், துணை தலைவர் தங்கராஜ், துணை செயலாளர் ஆர்.ஏ.கதிரேசன், நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், சென்னை புறநகர் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் சுந்தரே சன், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் பூபாண்டியன், பால்ராஜ், தென்னிந்திய நாடார் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், மாநில இளைஞர் அணி தலைவர் விஜயகுமார், உமரிசங்கர், அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரசேகர், ஒருங்கிணைப்பாளர் சண்முக பாலாஜி, தமிழ்நாடு நாடார் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மார்க்கெட் ராஜா. #SivanthiAditanar
    ×